tag:blogger.com,1999:blog-22933032.post1531394076995992045..comments2023-04-12T21:27:18.979+05:30Comments on புத்தகம்: 15. மறைவாய் சொன்ன கதைகள்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22933032.post-1022067245692897842007-06-05T14:12:00.000+05:302007-06-05T14:12:00.000+05:30அருமையான புத்தகம்.புத்தகம் முழுவதும் ஆக்கிரமித்து ...அருமையான புத்தகம்.<BR/><BR/>புத்தகம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும் கிராமிய எழுத்து நடையும், கதை சொன்னவிதமும் மிகவும் அருமை.<BR/><BR/>அத்தைகொண்டான், இருதலைமணியன், உம்முனாமூஞ்சி புலவர் இதுபோன்ற சில கதைகளை இப்போது நினைத்தால்கூட சிரிப்புதான்.<BR/><BR/>மேலாடை அணியாப் பெண்களில் ஒருத்தி, தன் பிறப்புறுப்பைக் காட்டி ராஜாவை வரவேற்கும் கதை அக்கால சமூக அவலங்களைப் பற்றி யோசிக்க வைத்தது.<BR/><BR/>தன்னை முதல்முதலாக முழுநிர்வாணமாக ஓர் ஆண் பார்க்கும்போது, முதலில் மார்பை மறைக்கும் பெண்ணின் கதை, "இப்புடி எல்லாம் யோசிபாய்ங்களா?" என என்னை யோசிக்க வைத்தது.<BR/><BR/>இப்புத்தகத்தின் 43வது கதையாக வரும் தவளை கதை, எனக்குத் தெரிந்தே இரண்டுமுறை பரிணாமம் அடைந்துவிட்டது. அந்த அளவுக்கு வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் சமூகம். SIM கார்டுகளே A jokes messaging செய்யும் காலம் இது. <BR/><BR/>வாய்வழியாக வெளிப்படையாக சொல்லப்பட்ட 100 கதைகளை, எழுத்து வழியாக மறைவாய்ச் சொல்லி இருக்கிறார்கள். இதில் எதிர்ப்பெதற்கு?<BR/><BR/>நல்ல முயற்சி. அடுத்த முயற்சிக்கு வாழ்த்துகள், ஆசிரியர்களுக்கு.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.com