Friday, November 27, 2009

விகடனில் 'புத்தகம்' வலைப்பூ

ஆனந்த விகடன் இவ்வார இதழில் (02/12/2009) 43ஆம் பக்கத்தில் 'விகடன் வரவேற்பறை' பகுதியில் 'புத்தகம்' வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்திருக்கிறது. விகடனுக்கு நன்றிகள். இவ்வறிமுகம், இன்னும் சிலரிடம் புத்தகத்தைக் கொண்டுசேர்க்கும் என்பதில் மகிழ்ச்சி!

வாசிப்பானுபவம் ஒரு தேர்ந்த எழுத்தாளனையும், மேலாக தேர்ந்த மனிதனையும் உருவாக்கும் என்ற என் மாறாத நம்பிக்கை இன்னும் என்னை வாசிக்கச் செய்துகொண்டிருக்கிறது. இதே நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேருடன் என் வாசிப்பானுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அந்நோக்கத்துக்காகவே இவ்வலைப்பூ தொடங்கப்பட்டது. இதில் என்னுடன் கைகோர்த்துக்கொண்ட நண்பர்கள் ஞானசேகர், பீ'மோர்கன், மற்றும் ரெஜோவாசனுக்கு என் நன்றிகள்.

விகடனின் அறிமுக வரிகள் :

படித்ததைப் பகிர...

படிக்கும் புத்தகம் குறித்துப் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வலைப்பூ. தமிழ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி சார்ந்த புத்தகங்கள் குறித்த பகிர்வுகளும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பிரமிள் படைப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், மு.வரதராசனின் அகல் விளக்கு, ரா.கி.ரங்கராஜனின் கன்னா பின்னா கதைகள், வண்ணதாசனின் பெய்தலும் ஓய்தலும் எனப் பல்வேறு ரசனை சார்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. வாசிப்பை நேசிப்பவர்களுக்கான வலைப்பூ....

-ப்ரியமுடன்
சேரல்

No comments: