Friday, July 24, 2009

புத்தகத்துக்கு விருது



சுவாரசியமான வலைப்பூ என்ற விருதினை இந்த வலைப்பூவுக்கு வழங்கியிருக்கிறார் நண்பர் கிருஷ்ணபிரபு. அவருக்கு எங்கள் நன்றிகள்! பொதுவாகவே இந்தப் புத்தகம் வலைப்பூவுக்கு வரும் நபர்கள் குறைவு; அதுவும் பின்னூட்டமிடுபவர்கள் மிகக்குறைவு. இதைப் படித்து, அதற்கு இப்படி ஒரு விருதும் வழங்கி இருக்கும் நண்பருக்கு நன்றி தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

அன்புத்தம்பிகள் பாலா(http://beemorgan.blogspot.com/) மற்றும் ரெஜோ(http://www.rejovasan.com/) இவர்களும் என் வேண்டுகோளை ஏற்று, இந்த வலைப்பூவில் பங்களிக்க இசைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றியைச் சொல்லிக்கொள்கிறோம். இனி, தொடர்ந்து சில நல்ல புத்தகங்களைப் பற்றிய, நல்ல அறிமுகமும், நூல்நயமும் இங்கே அரங்கேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நண்பர் கிருஷ்ணபிரபு. எங்களால் இயன்றவரை அதை நிறைவேற்றுகிறோம்.

-சேரல், ஞானசேகர்

பின்குறிப்பு : ஏற்கனவே கருப்புவெள்ளையில் விருப்பப் பட்டியலை வெளியிட்டிருப்பதால் இங்கே வெளியிடவில்லை.

1 comment:

Unknown said...

உங்களுடன் மேலும் இருவரா...! ஆவலுடன் இருக்கிறேன்.