Thursday, December 29, 2011

84. கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

 பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------------
புத்தகம் : கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
எழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன்
விலை : ரூ.115
பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
-----------------------------------------------------------------------------------


சிங்கம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலைவாணி அவர்களின் கதையை, அடியாள் புத்தகத்தின் ஆசிரியர் ஜோதி நரசிம்மன் எழுத்து வடிவமாக்கி இருப்பதுதான் இப்புத்தகம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும். புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் இருந்து சில வரிகள் உங்களின் வாசிப்பிற்கு:


"இன்றைய சமூகத்தில் பெண் ஒரு நுகர்வு பொருள். ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபடக் காரணம், 'இவளை எந்த விலை கொடுத்தாவது அடைய வேண்டும்' என்கிற ஆணாதிக்க ம‌னோபாவம். பெரும்பாலும் பெண்கள் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பாலியல் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒன்றில் ஏமாந்து அல்லது ஏமாற்றப்பட்டுதான் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

விபச்சாரத்தில் வயிற்றுப்பசி உடல்பசி என்று இரண்டு வகைகள் உள்ளன. வயிற்றுப்பசிக்காக இந்தத் தொழிலில் தள்ளப்படுகிறவர்கள்தான் வெளியில் தெரிகிறார்கள். உடல்பசிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் கௌரவமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்."

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: