பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------------------------
புத்தகம் : ஊர்க்கதைகள்
ஆசிரியர் : வெ.நீலகண்டன் (குங்குமம் இதழில் உதவி ஆசிரியர்)
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2009
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 199 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------------------------
சில சமயங்களில் சில ஊர்கள் மர்மங்களைச் சுமந்துகொண்டோ, கலாச்சாரத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, இயற்கையின் கோலங்களில் மாட்டிக்கொண்டு பரிதாபமாகவோ மற்ற ஊர்களால் அறியப்படுகின்றன. அப்படியொரு ஊரைப்பற்றி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். கேரளமாநிலத்தில் ஒரு கிராமம். ஊர் முழுக்க முந்நூறுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு சோடி; ஆணும் ஆணும்; பெண்ணும் பெண்ணும்; ஆணும் பெண்ணும் கூட. வாக்கப்பட்டுப் வெளியூர் போகிற பெண்களுக்கெல்லாம் இரட்டையர்கள் பிறப்பதில்லை; வாக்கப்பட்டு இவ்வூருக்கு வருகிற பெண்களில் பலர் இரட்டையர்களைப் பெறுகிறார்கள்.விஞ்ஞானிகளின் மண்டையைக் குழப்பும் அக்கிராமம் மனிதனின் அறிவெல்லைக்கே சவால்விட்டுக் கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் - சிவகங்கை மாவட்டங்களில் சென்ற மாதம் நான் சுற்றித் திரிந்தபோது 'நெற்குப்பை' என்றொரு ஊரின் பெயரைப் பார்த்தேன். அதன் பெயர்க்காரணம் பற்றி அதிகம் யோசித்ததாலோ என்னவோ, திருச்சி ஒடிசியில் இப்படியொரு புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். பொருளடக்கத்தில் மிலிட்டரியூர், தீர்க்கசுமங்கலியூர், தத்தங்கியூர் என ஊர்களின் பெயர்கள் இருந்தன. சரி இதுமாதிரி வித்தியாசமான பெயர்கொண்ட 35 ஊர்களின் பெயர்க்காரணம் சொல்லும் புத்தகம் என நம்பி வாங்கினேன். ரொட்டி தின்ன வந்தவனுக்குப் பெனிசிலினின் அறிமுகம் கிடைத்ததுபோல், நான் ஒன்றை எதிர்பார்க்க நான் தேடும் அரிய வேறொன்றைத் தந்துபோனது இப்புத்தகம்.
கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். கிராமம் என்ற மிஞ்சியிருக்கும் ஒரு பொருளில் எஞ்சியிருக்கும் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் - சடங்குகளையும், சில நகரங்களின் பழமைச் சிறப்புகளையும் தளமாகக்கொண்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர். எல்லா ஊர்களிலும் ஆசிரியர் தங்கி வாழ்வியல் சூழலை உள்வாங்கி எழுதியிருப்பதும், ஊர்களை வாசகனுக்குப் படைத்திருக்கும் விதமும் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.
பெண்களை ஒடுக்கும் சடங்குகளை இன்னும் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் வாழும் ஊர்களைப் பற்றி பேசுகிறது முதல் கட்டுரை. அந்நிய மனிதர்களை அனுமதிக்காத அக்கிராமங்கள் ஒன்றினுள் ஆசிரியர், ஓர் அரசதிகாரியெனப் பொய்சொல்லி அவர்களைப் பேட்டிகண்டதும், உண்மை தெரிந்த பிறகு கிராமத்தில் இருந்து வெளிவர பெரும்பாடுபட்டதையும் கூறுகிறார்.
கதாநாயகர்கள் பெயரையே காவியத்திற்குப் பெயராக வைப்பதுபோல் இல்லாமல், ஒவ்வோர் ஊருக்கும் / கட்டுரைக்கும் தலைப்பாக ஆசிரியரே பெயர் வைத்துள்ளார். இசையூர் என்ற தலைப்பில் நாதஸ்வரம் செய்யும் ஊர்; சுயபிரசவமூர் என்ற தலைப்பில் உயிரிழப்பில்லாமல் சுயபிரசவங்கள் நடக்கும் ஓர் ஊர். இப்படித்தான் 35 ஊர்களுக்கான தலைப்புகளும். ஒவ்வொரு தலைப்பையும் பார்த்துவிட்டு எதுமாதிரியான ஊராயிருக்கும் என்று கற்பனை செய்துசெய்து படித்தேன்.
மொய்விருந்து விழா எடுத்து மொய் வசூலிக்கும் ஓரூர்; மனிதர்களே இல்லாத ஓரூர்; தீபாவளிக்குப் பட்டாசுகளைத் தவிர்க்கும் ஓரூர்; ஏழு ரூபாய்க்குச் சாப்பாடு தரும் ஓரூர்; மின்சாரம் இல்லாத பணக்கார ஊர். இதுபோன்ற தகவல்களில் ஆச்சரியப்படவைக்கும் ஊர்கள் பல இருந்தாலும், மனதைப் பதறவைக்கும் சில ஊர்களும் உண்டு. புற்றுநோயாளிகளை உண்டாக்கும் ஓரூர்; வாய்பேச முடியாதவர்களும், காதுகேளாதவர்களும் பிறக்கும் ஓரூர்.
இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் குறிப்பிடப்படாமல் இருப்பது சிறுகுறையாகப்படுகிறது. மின்சாரம் இல்லாத ஊரைப் பற்றி விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் மின்னிணைப்பு பெற்றதாக அறிந்தேன். தெருக்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவலும் கிடைத்தது. குடிசை வீடுகள் மட்டுமே புத்தகம் சொல்லும் இடங்களில் இன்னும் கான்கிரீட் கூரைகளும் இருப்பதாக அறிந்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள அந்த 35 ஊர்களில் சென்னைக்குட்பட்டவை 6. சிற்பியூரையும் பட்டுச்சேலையூரையும் தவிர, எனக்குப் பரிச்சயமானவை 11; ஆனால் ஆசிரியர் சொல்லும் விசயங்களில் நான் அந்த ஊர்களை அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. 35ல் 3 ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன், நேரடியாகச் சென்றுபார்க்க.
பெரும்பாலும் ஆசிரியர் பணிநிமித்தம் இருந்த இடங்களுக்கு அருகிலுள்ள ஊர்களையே ஆவணப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் ஒரு நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் இப்புத்தகம் தொடாத பகுதிகள் ஏராளம். ஒரு நல்ல வாசகனின் தேடுதலுக்கு ஒரு தூண்டுகோலாக கண்டிப்பாக இப்புத்தகம் அமையும். கழுவூர், செம்மண்ணூர், ஜல்லிக்கட்டூர் என நான் கூட சில தலைப்புகள் தயார்ப்படுத்திவிட்டேன்.
குடுகுடுப்பை குமரியில் பிடிப்பவனை S.T.(Scheduled Tribes) பிரிவிலும், ஆரணியில் பிடிப்பவனை S.T. அல்லாத பிரிவிலும் வைத்திருக்கும் இந்த வித்தியாசமான இந்தியாவின் உண்மை முகம், கிராமங்களில் உள்ள உணர்வு பூர்வமான மனிதர்களிடம்தான் உள்ளது. காந்தி சொன்னதுபோல் அதைத் தேடிப்பாருங்கள்!
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)
Wednesday, May 26, 2010
Wednesday, April 28, 2010
61. கிருஷ்ணன் வைத்த வீடு
ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது
-கவிஞர் சுகுமாரன்
---------------------------------------------------
புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2000
விலை : ரூ 75
பக்கங்கள் : 136
---------------------------------------------------
சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.
வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.

இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக அமையலாம்.
இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின்றன. இந்த 'நான்' வண்ணதாசனாகவோ அல்லது அவர் தன்னைப் பொருத்திப் பார்க்க விரும்பும் ஒரு பிம்பமாகவோ இருக்கலாம் என்பதென் எண்ணம்.
தொகுப்பின் முதல் கதை 'கிருஷ்ணன் வைத்த வீடு'. ஏதேனும் ஒரு நாளில் நினைத்துப் பார்ப்பதற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் சில பழைய நினைவுகள் இருப்பது மிகவும் இயல்பானதே! அப்படியான ஒரு தனிமனிதனின் மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கிருஷ்ணன் வைத்த வீட்டின்' நினைவுகளைப் பால்ய நண்பன் ஒருவன் கிளற, அதைத் தொடர்ந்த நினைவு ரேகைகளைப் பின்தொடர்கிறது இக்கதை. இது போன்றதொரு கதையை யாரும் எழுதிவிட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு, கிட்டத்தட்ட இது போன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கூட வாய்த்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகம். ஆனாலும், இவரின் நடையும், அந்த அனுபவத்தை விவரிக்கும் தன்மையும், ஆழ்ந்த எழுத்து முதிர்வின் அடையாளமாக நிற்கின்றன.
வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரும்பாலான சமயங்களில் நமக்கு நிறைவேறுவதில்லை. சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடே நிலையற்றதாக இருக்கும் நாம், சக மனிதனின் வாழ்க்கையின் மீதான நம் எதிர்பார்ப்புகளை என்ன செய்வது? ஏமாற்றம் ஏற்படும் பொழுதுகளில் எந்த வழியே தப்பித்தோடுவது? வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஒரு அசாதாரணமான மனநிலைதானே! வாழ்வின் சாதாரணமான நியதிகளையும், சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாம் அசாதாரணமானவற்றைப் பார்க்கும்போது எப்படி எதிர்வினை புரிகிறோம்? ஐந்து விரல்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத நமக்கு ஆறாவது விரல் புரியாது போவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 'ஆறாவது விரல்' சிறுகதையும் அசாதாரணமான ஒரு நிலையை சாதாரணமானவர்களின் பார்வையில் அணுகுகிறது.
'உள்புறம் வழியும் துளிகளில்' இருக்கும் பாத்திரங்களின் ரசனையை நம்மால் ரசிக்காமல் இருக்கவியலாது.
இருவேறு மனநிலைகளில், இருவேறு சூழ்நிலைகளில் வாழும் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறது 'ஒரு நிலைக்கண்ணாடி...சில இட வல மாற்றங்கள்' சிறுகதை. பறவைகளின் ஒலியும், மரங்கள் உரசும் ஒலியும் மட்டுமே நிறைந்திருக்கும் வெயில் கால வனத்தின் சிற்றோடையின் சலனத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது இக்கதையின் ஓட்டம்.
'உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே, அது இன்னமுன் இருக்கா அக்கா?'
என்ற கேள்வியில் தொடங்கி,
'இன்னமும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே, எங்கள் வீட்டு மச்சில் இருக்கிற நிலைக்கண்ணாடி பற்றி.....அதில் பார்த்தால் ஒருவேளை தெரியுமோ என்னவோ!'
என்று முடிந்து, தடவிப்பார்த்து உணர்ந்து மகிழுமொரு ரகசிய முடிச்சைப் போட்டுச் செல்கிறது.
தொகுப்பின் கடைசியில் 'சின்னு முதல் சின்னு வரை' எனும் குறுநாவல் இடம்பெற்றிருக்கிறது. நமக்கு இணக்கமானவர்களின் வாழ்வில் ஏற்படும் நிலைமாறுபாடுகள், அதன் மீதான சமூகப்பார்வை, மனிதாபிமானம் என்கிற கோட்டுக்குள் கண்ணுக்குப் புலப்படாமல் வரையப்பட்டிருக்கும் தன்னலம் என்கிற பாதுகாப்புவட்டம், என்று உளவியல் ஆய்வு செய்கிறது இக்குறுநாவல்.
எல்லாக் கதைகளுமே உணர்வுகளை ஆராயும் போக்கிலேயே அமைந்திருப்பதாகப்படுகிறது. வண்ணதாசன் எழுத்தின் வீரியத்தை இத்தொகுப்பிலும் காணமுடிகிறது. நெகிழ்ச்சியடைவது வாழ்வில் எப்பொழுதாவது நிகழ்வதுண்டு. வண்ணதாசனின் எழுத்து வாசிப்பில் இது எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, இப்புத்தகத்திலும் கூட.
- சேரல்
http://seralathan.blogspot.com/
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது
-கவிஞர் சுகுமாரன்
---------------------------------------------------
புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2000
விலை : ரூ 75
பக்கங்கள் : 136
---------------------------------------------------
சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.
வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.

இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக அமையலாம்.
இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின்றன. இந்த 'நான்' வண்ணதாசனாகவோ அல்லது அவர் தன்னைப் பொருத்திப் பார்க்க விரும்பும் ஒரு பிம்பமாகவோ இருக்கலாம் என்பதென் எண்ணம்.
தொகுப்பின் முதல் கதை 'கிருஷ்ணன் வைத்த வீடு'. ஏதேனும் ஒரு நாளில் நினைத்துப் பார்ப்பதற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் சில பழைய நினைவுகள் இருப்பது மிகவும் இயல்பானதே! அப்படியான ஒரு தனிமனிதனின் மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கிருஷ்ணன் வைத்த வீட்டின்' நினைவுகளைப் பால்ய நண்பன் ஒருவன் கிளற, அதைத் தொடர்ந்த நினைவு ரேகைகளைப் பின்தொடர்கிறது இக்கதை. இது போன்றதொரு கதையை யாரும் எழுதிவிட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு, கிட்டத்தட்ட இது போன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கூட வாய்த்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகம். ஆனாலும், இவரின் நடையும், அந்த அனுபவத்தை விவரிக்கும் தன்மையும், ஆழ்ந்த எழுத்து முதிர்வின் அடையாளமாக நிற்கின்றன.
வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரும்பாலான சமயங்களில் நமக்கு நிறைவேறுவதில்லை. சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடே நிலையற்றதாக இருக்கும் நாம், சக மனிதனின் வாழ்க்கையின் மீதான நம் எதிர்பார்ப்புகளை என்ன செய்வது? ஏமாற்றம் ஏற்படும் பொழுதுகளில் எந்த வழியே தப்பித்தோடுவது? வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஒரு அசாதாரணமான மனநிலைதானே! வாழ்வின் சாதாரணமான நியதிகளையும், சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாம் அசாதாரணமானவற்றைப் பார்க்கும்போது எப்படி எதிர்வினை புரிகிறோம்? ஐந்து விரல்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத நமக்கு ஆறாவது விரல் புரியாது போவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 'ஆறாவது விரல்' சிறுகதையும் அசாதாரணமான ஒரு நிலையை சாதாரணமானவர்களின் பார்வையில் அணுகுகிறது.
'உள்புறம் வழியும் துளிகளில்' இருக்கும் பாத்திரங்களின் ரசனையை நம்மால் ரசிக்காமல் இருக்கவியலாது.
இருவேறு மனநிலைகளில், இருவேறு சூழ்நிலைகளில் வாழும் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறது 'ஒரு நிலைக்கண்ணாடி...சில இட வல மாற்றங்கள்' சிறுகதை. பறவைகளின் ஒலியும், மரங்கள் உரசும் ஒலியும் மட்டுமே நிறைந்திருக்கும் வெயில் கால வனத்தின் சிற்றோடையின் சலனத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது இக்கதையின் ஓட்டம்.
'உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே, அது இன்னமுன் இருக்கா அக்கா?'
என்ற கேள்வியில் தொடங்கி,
'இன்னமும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே, எங்கள் வீட்டு மச்சில் இருக்கிற நிலைக்கண்ணாடி பற்றி.....அதில் பார்த்தால் ஒருவேளை தெரியுமோ என்னவோ!'
என்று முடிந்து, தடவிப்பார்த்து உணர்ந்து மகிழுமொரு ரகசிய முடிச்சைப் போட்டுச் செல்கிறது.
தொகுப்பின் கடைசியில் 'சின்னு முதல் சின்னு வரை' எனும் குறுநாவல் இடம்பெற்றிருக்கிறது. நமக்கு இணக்கமானவர்களின் வாழ்வில் ஏற்படும் நிலைமாறுபாடுகள், அதன் மீதான சமூகப்பார்வை, மனிதாபிமானம் என்கிற கோட்டுக்குள் கண்ணுக்குப் புலப்படாமல் வரையப்பட்டிருக்கும் தன்னலம் என்கிற பாதுகாப்புவட்டம், என்று உளவியல் ஆய்வு செய்கிறது இக்குறுநாவல்.
எல்லாக் கதைகளுமே உணர்வுகளை ஆராயும் போக்கிலேயே அமைந்திருப்பதாகப்படுகிறது. வண்ணதாசன் எழுத்தின் வீரியத்தை இத்தொகுப்பிலும் காணமுடிகிறது. நெகிழ்ச்சியடைவது வாழ்வில் எப்பொழுதாவது நிகழ்வதுண்டு. வண்ணதாசனின் எழுத்து வாசிப்பில் இது எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, இப்புத்தகத்திலும் கூட.
- சேரல்
http://seralathan.blogspot.com/
Labels:
சிறுகதைத் தொகுப்புகள்,
பா.சேரலாதன்
Friday, April 16, 2010
60. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- வள்ளுவம்
God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .
- Thomas Loren Friedman (The Lexus and the Olive Tree)
-------------------------------------------------
புத்தகம் : இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2006
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 192 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)
--------------------------------------------------

ஆசிரியர் தாராபுரத்துக்காரர். தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களில் ஆசிரியர் எழுதியிருந்த 32 சுற்றுச்சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள், காட்டுயிர்கள் அழிவின் மீதான எச்சரிக்கைகள், இயற்கையின் பேரன்பிலிருக்கும் அறம் குறித்தன மனிதனின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.
ஆசிரியரை இரண்டு விசயங்களில் பாராட்டியே ஆக வேண்டும்.
1. பெரும்பாலும் நேரடி அனுபவங்களைத் தொகுத்திருப்பதாலும், ஒத்த சிந்தனை உடையவர்களை மொழி வேறுபாடு பாராமல் அடையாளம் காட்டியிருப்பதாலும், அதிகம் மெனக்கெட்டிருப்பதாலும், புத்தகத்தின் தரம் கொஞ்சம் அதிகம்!
2. புத்தகம் முழுவதும் பரவியிருக்கும் தகவல்களும், வார்த்தை உபயோகங்களும், இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்களில் ஆசிரியர் காட்டியிருக்கும் நிதானமான - ஒழுங்குபடுத்தப்பட்ட கோபமும், நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்களும்.
விவேக் மாதிரியே காமெடி பண்றார்னு எம்.ஆர்.ராதா அவர்களைக் காட்டுகிறான் ஒரு தமிழ்ப்பையன். இளவேனில் - முதுவேனில் - கார் - கூதிர் - முன்பனி - பின்பனி என்று பருவங்களைப் பி+படித்திருந்த வம்சத்தில் பிறந்த நாம், மழை வருமா என செய்திவாசிப்பாளரைக் கேட்கிறோம். முடங்களை - கோனரி - கேசரி - சீயம் - வயமா - அரி - மடங்கல் - கண்டீவரம் - ஏறு என பல சொற்களால் வலம்வந்த 'சிங்கம்' என்ற ஒன்றை, தமிழ் - சாமி - கோவில் - அருள் என்ற ஹரியின் வரிசைகளில் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைவிட்டு நீண்ட தூரம் ஓடிப்போய்விட்ட இப்போதைய மனிதனுக்கு இப்படியொரு புத்தகம் கண்டிப்பாகத் தேவைதான்.
புலி (வேங்கை), காட்டெருது, யானை (வேழம்), சிங்கம், காண்டாமிருகம், குறிஞ்சிமலர் எனக் காட்டுயிர்கள் பற்றித் தனித்தனி கட்டுரைகளில் விவாதிக்கிறது புத்தகம். வண்டலூர், பெரியாறு, காசிரங்கா, கிர், பந்திப்பூர், முண்டந்துறை, அடையாறு கழிமுகம் என்று சில இடங்களும் தேவைப்படும் இடங்களில் வந்து போகின்றன. இவற்றிற்கெல்லாம் எப்படி கேடுகாலம் ஆரம்பித்தது எனவும், அவற்றின் அழிவைக் கொண்டாடியவர்கள் பற்றியும், அவற்றைக் காப்பாற்றப் போராடிய + போராடுபவர்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம்.
மெட்ராஸ் சமஸ்தானத்தில் இருந்து கொண்டுபோன மரங்களால்தான் வாட்டர்லூ போரில் நெப்போலியனைப் பிரிட்டிஷ் படைகள் வெல்ல முடிந்ததென ராமச்சந்திர குஹா (Ramachandra Guha) சொல்லியிருக்கும் கருத்தும், வேட்டை இலக்கியம் முதல் இரயில்பாதை வரை பிரிட்டிஷ்காரர்கள் தனது காலனியின் காட்டுயிர்களைக் காவு வாங்கிய கதைகளும் அருமையான தொகுப்புகள். புலியையும் யானையையும் கொன்று பாடம் செய்வது பிரிட்டிசையும், பிகரையும் குஷிப்படுத்தும் வீரதீர செயல்களாகக் கருதிய நம்மவர்களும் அதையே கொஞ்சம் மறைமுகமாக இன்னும் தொடர்வதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். மதம், அரசியல், பணம் என்று எல்லாவறையும் போட்டுக் குழப்பிக் கொண்டு நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம் என எல்லாத் திட்டங்களிலும் சட்டுபுட்டென்று முடிவுகள் எடுக்கப்படுவதால்தான், ஒரு கத்திரிக்காயைக் (Bacillus thuringiensis Brinjal) கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கத்திரிக்காயில் அரசியல் செய்யவிடுகிறோம்.
இதுபோன்ற 'அறியாமை'களைத்தான், இப்போதைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் மிகப்பெரிய தடை என்கிறார் ஆசிரியர். பல்லி விழுந்த உணவு நஞ்சு என்பதும், பாம்பின் விசத்திற்கு மருந்தே பாம்புதான் என்று தெரியாமல் பாம்புகளைக் கொல்வதும், மறைந்திருக்கும் மருத்துவக்குணங்கள் தெரியாமலேயே கண்மூடித்தனமாகக் காட்டுயிர்களை மனிதக்கருபோல அழிப்பதும், சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட எந்தவொரு அரசுத்திட்டத்தையும் எதுவும் ஆராயாமல் ஆதரிப்பதும் / எதிர்ப்பதும் போன்ற பல அறியாமைகள். இந்த அறியாமை எல்லா நிலைகளிலும் இருக்கிறது. Listening to Grasshoppers புத்தக முன்னுரையில் நதிநீர் இணைப்பு பற்றி அருந்ததி ராய் அவர்கள் வருத்தப்பட்டு சொல்லும் மேற்கோளும் ஓர் உதாரணம். செய்தித்தாள்கள் அடிக்கடி காட்டும் எறும்புத்தின்னி எனும் விலங்கின் பெயர் அலங்கு என்கிறார் ஆசிரியர். அலங்கு என்ற வார்த்தை தமிழில் எரும்பையுண்ணும் ஓர் ஊர்வனயினத்தைம், ஒரு நாயினத்தையும் குறிக்கிறதாம்.

தி.ஜானகிராமன் அவர்கள் மோகமுள்ளில் சொன்னதுபோல், கேவலம் சோற்றுக்காக நாயை வாலைக் குழைத்து நிற்க வைக்கிறோம். நம்மைவிட அளவிலும் பலத்திலும் ஞாபகசக்தியிலும் பெரிய யானையைவைத்து யாசகம் செய்கிறோம். கள்ளக்காதல் முதல் குழாயடி சண்டைவரை நடக்கும் கொலைகள் சிலவற்றில் நஞ்சு இல்லாத பல்லியின்மேல் பழி சுமத்துகிறோம். ஒன்றைப் பற்றி புரியாத அல்லது தெரியாத பொழுதுதான் பயமே உருவாகிறது; அல்லது நமது குற்றங்களை மறைத்துக் கொள்ள இன்னொன்றைக் குற்றப்படுத்துகிறோம். கமலஹாசன் தெளிவாய்ச் சொல்வார்:
'நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவோர் தூற்றினும்
நச்சதற்குக் கேடயம் போல்
தற்காப்பு ஆயுதமே.
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்'.
இயற்கைக்கு மனிதன் உட்பட ஒவ்வோர் உயிரும் ஓர் அங்கமே எனும் அறிவு வந்தால்தான் பயம் போய் பாதுகாக்க + மதிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். அவ்வக்கறை பாம்பை அடிப்பதாக நினைக்கும்போது கூட நம்மைத் துரத்திவர வேண்டும்!
புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் மாறுபடும் நியதிக்குட்பட்டு, புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். காட்டுத் தர்பார், நரிபுத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய விலங்குகள், வினோத மிருகம் போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு காட்டுயிர்கள் பற்றிய ஆரோக்கியமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார். ஏற்காடருகே இரு யானைகள் காப்பித் தோட்டத்தருகே வந்ததை, 'யானையின் அட்டகாசம்' என்று ஓர் இதழும் 'வாழிடம் தேடும் யானைகள்' என்று இன்னோர் இதழும் செய்திகள் வெளியிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். டால்பினுக்கான தமிழ்ச்சொல்லையும், உள்ளினப்பெருக்கம் என்ற தமிழ்ச்சொல்லையும் ஆசிரியர் குறிப்பிட்டபோது புதிய சொற்கள் மேலும் மொழியை மெருகூட்டுவதை உணரமுடிந்தது.
ஒரு குறும்படத்தைப் பார்த்தவர்கள் சிலர், 'யானைகள் பங்கேற்கும் எந்த விழாவிற்கும் செல்லமாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். அதுபோன்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையும், சுற்றுச்சூழல் பற்றிய பதங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அமைப்பதும், இயற்கைக்கு எல்லாரும் ஒருநாள் பதில்சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் போதும்!
'மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருக்கக் கூடாது; அப்படியொன்று இருக்குமானால் மனிதர்கள் கற்களால் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். தண்ணீர் என்ற பொருளுக்காக அணுவாயுதங்களுடன் கோலாகலமாகக் கொலைக்களங்களை அப்போர் உருவாக்கப் போவதின் தாக்கத்தை, இக்கோடையின் தாகத்தில் நாமெல்லாம் உணரமுடிகிறது. ஒரு சாமானியனுக்கு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போனாலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' புத்தகத்தில் இடம்பெறும் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' என்ற சிறுகதைபோல், தனது வயிற்று வாரிசுகளைத் தூக்கிக்கொண்டு இயற்கையைத் தேடி வீதிவீதியாகத் திரியப்போகும் ஒரு தலைமுறை உருவாகாமல் தடுக்க என்னால் - உங்களால் - எல்லாராலும் முடியும்.
அரசுத் திட்டங்கள், சுற்றுலா, தேனிலவு என்ற பெயரில் இயற்கையை மிகநெருங்கும் திட்டங்களுக்குத் தீர ஆராய்வோம்! கவிதைகள்,புதினங்கள் தவிர இதுபோன்ற சமூக நோக்குள்ள புத்தகங்களையும் நண்பர்களுக்குப் பரிசளிப்போம்! வாங்கும் பொருளின் மூலம் தெரிந்து பல்லுயிர்ப் பாதுகாப்போம்!
பூமி இழந்திடேல்!
அனுபந்தம்:
1. பிராணிநலம் பேணும் பேர்வழி என்று ஒரு கூட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறைச்சி சாப்பிடும் சமூகத்தினரைப் புறக்கணிக்கும் ஒரு மேல்தட்டு கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. Corporate vegetarians! அப்படியொரு கூட்டம் ஆழிப்பேரலை புனர் சீரமைப்பில், மீனவர்களுக்கு வலைகளைத் தவிர என்ன வேண்டுமாலும் தருவதாகச் சொன்னதாம். வலையில்லாத மீனவன் வாழ வழி? Structural genocide செய்யும் இப்படியொரு கூட்டத்தை நம்பி நம்மில் எத்தனை பேர் பொருள் கொடுத்திருந்தோமோ? கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ?
2. ஏப்ரல் முதல் வாரம் தனுஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவுப்படி,சேது சமுத்திரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.
3. கொங்கு நாடுகளில் நானும் சேரலாதனும் சுற்றித்திரிந்த இரண்டு நாட்களில், டாப்ஸ்லிப் என்ற இடத்தின் பெயரைக் கேட்டு, சுகபோக விரும்பிகள் கூடுமிடமென நினைத்து, அவ்விடத்திற்குச் செல்லவில்லை. இப்புத்தகம் படித்த பிறகுதான் அவ்விடத்தின் பெயர்க்காரணமும் பிரிட்டிஷ் வரலாற்றில் பெற்றிருந்த அதிமுக்கிய பங்கும் தெரிந்தது. அழாத குறையாக, போச்சே போச்சே போச்சே என்று சேரலாதனுக்குப் போன் போட்டுக் கதை சொன்னேன். தம்பி அசந்து போனார்! அவ்விடத்திற்குச் சென்ற ஆசிரியர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அப்பகுதியை அழிக்கப்படாமல் காத்த ஓர் ஆங்கில அதிகாரியின் கல்லறை வாசகத்துடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்; நானும் அதையே வழிமொழிந்து விடைபெறுகிறேன்.
"நினைவுச் சின்னத்தைக் காண வேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்".
- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- வள்ளுவம்
God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .
- Thomas Loren Friedman (The Lexus and the Olive Tree)
-------------------------------------------------
புத்தகம் : இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2006
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 192 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)
--------------------------------------------------
ஆசிரியர் தாராபுரத்துக்காரர். தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களில் ஆசிரியர் எழுதியிருந்த 32 சுற்றுச்சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள், காட்டுயிர்கள் அழிவின் மீதான எச்சரிக்கைகள், இயற்கையின் பேரன்பிலிருக்கும் அறம் குறித்தன மனிதனின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.
ஆசிரியரை இரண்டு விசயங்களில் பாராட்டியே ஆக வேண்டும்.
1. பெரும்பாலும் நேரடி அனுபவங்களைத் தொகுத்திருப்பதாலும், ஒத்த சிந்தனை உடையவர்களை மொழி வேறுபாடு பாராமல் அடையாளம் காட்டியிருப்பதாலும், அதிகம் மெனக்கெட்டிருப்பதாலும், புத்தகத்தின் தரம் கொஞ்சம் அதிகம்!
2. புத்தகம் முழுவதும் பரவியிருக்கும் தகவல்களும், வார்த்தை உபயோகங்களும், இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்களில் ஆசிரியர் காட்டியிருக்கும் நிதானமான - ஒழுங்குபடுத்தப்பட்ட கோபமும், நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்களும்.
விவேக் மாதிரியே காமெடி பண்றார்னு எம்.ஆர்.ராதா அவர்களைக் காட்டுகிறான் ஒரு தமிழ்ப்பையன். இளவேனில் - முதுவேனில் - கார் - கூதிர் - முன்பனி - பின்பனி என்று பருவங்களைப் பி+படித்திருந்த வம்சத்தில் பிறந்த நாம், மழை வருமா என செய்திவாசிப்பாளரைக் கேட்கிறோம். முடங்களை - கோனரி - கேசரி - சீயம் - வயமா - அரி - மடங்கல் - கண்டீவரம் - ஏறு என பல சொற்களால் வலம்வந்த 'சிங்கம்' என்ற ஒன்றை, தமிழ் - சாமி - கோவில் - அருள் என்ற ஹரியின் வரிசைகளில் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைவிட்டு நீண்ட தூரம் ஓடிப்போய்விட்ட இப்போதைய மனிதனுக்கு இப்படியொரு புத்தகம் கண்டிப்பாகத் தேவைதான்.
புலி (வேங்கை), காட்டெருது, யானை (வேழம்), சிங்கம், காண்டாமிருகம், குறிஞ்சிமலர் எனக் காட்டுயிர்கள் பற்றித் தனித்தனி கட்டுரைகளில் விவாதிக்கிறது புத்தகம். வண்டலூர், பெரியாறு, காசிரங்கா, கிர், பந்திப்பூர், முண்டந்துறை, அடையாறு கழிமுகம் என்று சில இடங்களும் தேவைப்படும் இடங்களில் வந்து போகின்றன. இவற்றிற்கெல்லாம் எப்படி கேடுகாலம் ஆரம்பித்தது எனவும், அவற்றின் அழிவைக் கொண்டாடியவர்கள் பற்றியும், அவற்றைக் காப்பாற்றப் போராடிய + போராடுபவர்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம்.
மெட்ராஸ் சமஸ்தானத்தில் இருந்து கொண்டுபோன மரங்களால்தான் வாட்டர்லூ போரில் நெப்போலியனைப் பிரிட்டிஷ் படைகள் வெல்ல முடிந்ததென ராமச்சந்திர குஹா (Ramachandra Guha) சொல்லியிருக்கும் கருத்தும், வேட்டை இலக்கியம் முதல் இரயில்பாதை வரை பிரிட்டிஷ்காரர்கள் தனது காலனியின் காட்டுயிர்களைக் காவு வாங்கிய கதைகளும் அருமையான தொகுப்புகள். புலியையும் யானையையும் கொன்று பாடம் செய்வது பிரிட்டிசையும், பிகரையும் குஷிப்படுத்தும் வீரதீர செயல்களாகக் கருதிய நம்மவர்களும் அதையே கொஞ்சம் மறைமுகமாக இன்னும் தொடர்வதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். மதம், அரசியல், பணம் என்று எல்லாவறையும் போட்டுக் குழப்பிக் கொண்டு நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம் என எல்லாத் திட்டங்களிலும் சட்டுபுட்டென்று முடிவுகள் எடுக்கப்படுவதால்தான், ஒரு கத்திரிக்காயைக் (Bacillus thuringiensis Brinjal) கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கத்திரிக்காயில் அரசியல் செய்யவிடுகிறோம்.
இதுபோன்ற 'அறியாமை'களைத்தான், இப்போதைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் மிகப்பெரிய தடை என்கிறார் ஆசிரியர். பல்லி விழுந்த உணவு நஞ்சு என்பதும், பாம்பின் விசத்திற்கு மருந்தே பாம்புதான் என்று தெரியாமல் பாம்புகளைக் கொல்வதும், மறைந்திருக்கும் மருத்துவக்குணங்கள் தெரியாமலேயே கண்மூடித்தனமாகக் காட்டுயிர்களை மனிதக்கருபோல அழிப்பதும், சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட எந்தவொரு அரசுத்திட்டத்தையும் எதுவும் ஆராயாமல் ஆதரிப்பதும் / எதிர்ப்பதும் போன்ற பல அறியாமைகள். இந்த அறியாமை எல்லா நிலைகளிலும் இருக்கிறது. Listening to Grasshoppers புத்தக முன்னுரையில் நதிநீர் இணைப்பு பற்றி அருந்ததி ராய் அவர்கள் வருத்தப்பட்டு சொல்லும் மேற்கோளும் ஓர் உதாரணம். செய்தித்தாள்கள் அடிக்கடி காட்டும் எறும்புத்தின்னி எனும் விலங்கின் பெயர் அலங்கு என்கிறார் ஆசிரியர். அலங்கு என்ற வார்த்தை தமிழில் எரும்பையுண்ணும் ஓர் ஊர்வனயினத்தைம், ஒரு நாயினத்தையும் குறிக்கிறதாம்.

தி.ஜானகிராமன் அவர்கள் மோகமுள்ளில் சொன்னதுபோல், கேவலம் சோற்றுக்காக நாயை வாலைக் குழைத்து நிற்க வைக்கிறோம். நம்மைவிட அளவிலும் பலத்திலும் ஞாபகசக்தியிலும் பெரிய யானையைவைத்து யாசகம் செய்கிறோம். கள்ளக்காதல் முதல் குழாயடி சண்டைவரை நடக்கும் கொலைகள் சிலவற்றில் நஞ்சு இல்லாத பல்லியின்மேல் பழி சுமத்துகிறோம். ஒன்றைப் பற்றி புரியாத அல்லது தெரியாத பொழுதுதான் பயமே உருவாகிறது; அல்லது நமது குற்றங்களை மறைத்துக் கொள்ள இன்னொன்றைக் குற்றப்படுத்துகிறோம். கமலஹாசன் தெளிவாய்ச் சொல்வார்:
'நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவோர் தூற்றினும்
நச்சதற்குக் கேடயம் போல்
தற்காப்பு ஆயுதமே.
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்'.
இயற்கைக்கு மனிதன் உட்பட ஒவ்வோர் உயிரும் ஓர் அங்கமே எனும் அறிவு வந்தால்தான் பயம் போய் பாதுகாக்க + மதிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். அவ்வக்கறை பாம்பை அடிப்பதாக நினைக்கும்போது கூட நம்மைத் துரத்திவர வேண்டும்!
புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் மாறுபடும் நியதிக்குட்பட்டு, புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். காட்டுத் தர்பார், நரிபுத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய விலங்குகள், வினோத மிருகம் போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு காட்டுயிர்கள் பற்றிய ஆரோக்கியமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார். ஏற்காடருகே இரு யானைகள் காப்பித் தோட்டத்தருகே வந்ததை, 'யானையின் அட்டகாசம்' என்று ஓர் இதழும் 'வாழிடம் தேடும் யானைகள்' என்று இன்னோர் இதழும் செய்திகள் வெளியிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். டால்பினுக்கான தமிழ்ச்சொல்லையும், உள்ளினப்பெருக்கம் என்ற தமிழ்ச்சொல்லையும் ஆசிரியர் குறிப்பிட்டபோது புதிய சொற்கள் மேலும் மொழியை மெருகூட்டுவதை உணரமுடிந்தது.
ஒரு குறும்படத்தைப் பார்த்தவர்கள் சிலர், 'யானைகள் பங்கேற்கும் எந்த விழாவிற்கும் செல்லமாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். அதுபோன்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையும், சுற்றுச்சூழல் பற்றிய பதங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அமைப்பதும், இயற்கைக்கு எல்லாரும் ஒருநாள் பதில்சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் போதும்!
'மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருக்கக் கூடாது; அப்படியொன்று இருக்குமானால் மனிதர்கள் கற்களால் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். தண்ணீர் என்ற பொருளுக்காக அணுவாயுதங்களுடன் கோலாகலமாகக் கொலைக்களங்களை அப்போர் உருவாக்கப் போவதின் தாக்கத்தை, இக்கோடையின் தாகத்தில் நாமெல்லாம் உணரமுடிகிறது. ஒரு சாமானியனுக்கு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போனாலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' புத்தகத்தில் இடம்பெறும் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' என்ற சிறுகதைபோல், தனது வயிற்று வாரிசுகளைத் தூக்கிக்கொண்டு இயற்கையைத் தேடி வீதிவீதியாகத் திரியப்போகும் ஒரு தலைமுறை உருவாகாமல் தடுக்க என்னால் - உங்களால் - எல்லாராலும் முடியும்.
அரசுத் திட்டங்கள், சுற்றுலா, தேனிலவு என்ற பெயரில் இயற்கையை மிகநெருங்கும் திட்டங்களுக்குத் தீர ஆராய்வோம்! கவிதைகள்,புதினங்கள் தவிர இதுபோன்ற சமூக நோக்குள்ள புத்தகங்களையும் நண்பர்களுக்குப் பரிசளிப்போம்! வாங்கும் பொருளின் மூலம் தெரிந்து பல்லுயிர்ப் பாதுகாப்போம்!
பூமி இழந்திடேல்!
அனுபந்தம்:
1. பிராணிநலம் பேணும் பேர்வழி என்று ஒரு கூட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறைச்சி சாப்பிடும் சமூகத்தினரைப் புறக்கணிக்கும் ஒரு மேல்தட்டு கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. Corporate vegetarians! அப்படியொரு கூட்டம் ஆழிப்பேரலை புனர் சீரமைப்பில், மீனவர்களுக்கு வலைகளைத் தவிர என்ன வேண்டுமாலும் தருவதாகச் சொன்னதாம். வலையில்லாத மீனவன் வாழ வழி? Structural genocide செய்யும் இப்படியொரு கூட்டத்தை நம்பி நம்மில் எத்தனை பேர் பொருள் கொடுத்திருந்தோமோ? கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ?
2. ஏப்ரல் முதல் வாரம் தனுஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவுப்படி,சேது சமுத்திரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.
3. கொங்கு நாடுகளில் நானும் சேரலாதனும் சுற்றித்திரிந்த இரண்டு நாட்களில், டாப்ஸ்லிப் என்ற இடத்தின் பெயரைக் கேட்டு, சுகபோக விரும்பிகள் கூடுமிடமென நினைத்து, அவ்விடத்திற்குச் செல்லவில்லை. இப்புத்தகம் படித்த பிறகுதான் அவ்விடத்தின் பெயர்க்காரணமும் பிரிட்டிஷ் வரலாற்றில் பெற்றிருந்த அதிமுக்கிய பங்கும் தெரிந்தது. அழாத குறையாக, போச்சே போச்சே போச்சே என்று சேரலாதனுக்குப் போன் போட்டுக் கதை சொன்னேன். தம்பி அசந்து போனார்! அவ்விடத்திற்குச் சென்ற ஆசிரியர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அப்பகுதியை அழிக்கப்படாமல் காத்த ஓர் ஆங்கில அதிகாரியின் கல்லறை வாசகத்துடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்; நானும் அதையே வழிமொழிந்து விடைபெறுகிறேன்.
"நினைவுச் சின்னத்தைக் காண வேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்".
- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)